ஆக்கங்கள்/கட்டுரைகள் பகுதி

Saturday, August 7, 2010

ரமளான் மாதத்தின் சிறப்புகள்

அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்
“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1898)
முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரீ (1899)
முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன, வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன, ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப் படுகின்றன.
இதன் கருத்து என்ன? ரமலான் மாதம் வந்து விட்டால் அன்றைய தினம் மரணித்தவர் சுவர்க்கவாதியா? அல்லது ரமலான் மாதத்தில் ஷைத்தான்களின் எந்தச் செயல்களும் நடைபெறாதா? என்பன போன்ற சிந்தனை இந்த செய்திகளைப் பார்த்தால் நமக்குத் தோன்றலாம். ஆனால் அந்த ஹதீஸ்களின் கருத்து இவை அல்ல!

“ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன” என்பதன் கருத்து, ரமலான் மாதத்தில் சுவர்க்கத்திற்குச் செல்வதற்குரிய வழிவகைகள் நிறைந்திருக்கின்றன என்பது தான்.

மேலும் மற்ற நாட்களில் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை விட பன்மடங்கு நன்மைகள் இந்த நாட்களில் கிடைக்கும். இதனால் ஒருவர் இலகுவாக சுவர்க்கத்திற்குச் சென்றுவிட முடியும்.

இந்த கருத்தை முஸ்லிம் (1957வது) அறிவிப்பில் “ரமலான் வந்துவிட்டால் ரஹ்மத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்ற வாசகம் உறுதிப்படுத்துகிறது. மேலும் ரமலான் மாதத்தின் சிறப்புகளைக் கூறும் மற்ற ஹதீஸ்களும் இதை வலுவூட்டுகிறது.
“ஷைத்தான்கள் விலங்கிடப் படுகின்றனர்”என்றால் ஷைத்தான்கள் தங்கள் வேலைகளை இம்மாதத்தில் சரிவர செய்ய முடியாது, ஷைத்தான்களின் செயல்களை முறியடிக்கக்கூடிய வாய்ப்புகள் இம்மாதத்தில் அதிகம் என்பது தான்.

இம்மாதத்தில் ஷைத்தான்களின் காரியங்கள் அறவே நடக்காது என்பது இதன் பொருள் அல்ல! ஏனெனில் நபி (ஸல்) அவர்களே ரமலான் மாதத்தில் தவறான காரியங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

“யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதோ தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவை இல்லை” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ 1903)
இந்த நபிமொழியில் நோன்புக் காலங்களில் ஷைத்தானின் வேலைகளும் இருக்க வாய்ப்பு உண்டு என்பதைத் தெளிவுபடுத்துகிறது. மேலும் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நோன்பு வைத்துக் கொண்டு ஒரு நபித்தோழர் உடலுறவு கொண்டதும் (பார்க்க புகாரீ 1936) இக்கருத்தை உறுதி செய்கிறது.

கூடுதல் நன்மைகளை பெற்றுத் தரும் மாதம்

மற்ற எந்த வணக்கத்தை விடவும் நோன்புக்குக் கூடுதல் கூலியை அல்லாஹ் வழங்குகிறான். இது நோன்புக்கு உள்ள தனிச் சிறப்பாகும். “ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநுறு மடங்கு வரை கூலி வழங்கப்படுகிறது. ஆனால் நோன்பு எனக்கே உரியது. எனவே அதற்கு நானே கூலி வழங்குவேன்” என்று அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி), நுல்: முஸ்லிம் (2119)

கடந்த கால பாவங்கள் மன்னிக்கப்படுதல்

ரமலான் மாதத்தின் நோன்பை நோற்பதின் காரணத்தால் நாம் செய்த முந்தைய சிறு பாவங்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் மன்னிக்கின்றான்.

யார் லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் வணங்குகிறாரோ அவரது பாவம் மன்னிக்கப் படுகின்றது. யார் ரமாலனில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவர்களது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (1901), முஸ்லிம் (1393)

உம்ரா செய்தால் ஹஜ் நன்மை

ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் செய்த நன்மையை பெற்றுத் தரும்.
“ரமலான் மாதத்தில் உம்ரா செய்வது ஹஜ் (செய்த நன்மை) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரீ (1782) முஸ்லிம் (2408)

சுவர்க்கத்தில் தனி வாசல்

நோன்பு நோற்றவர் மறுமை நாளில் தனி வாசல் மூலம் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்படுவார்கள். இவ்வாசல் வழியாக நோன்பு நோற்காத எவரும் நுழைய முடியாது.

“சொர்க்கத்தில் ரய்யான் என்று கூறப்படும் ஒரு வாசல் இருக்கிறது. மறுமை நாளில் அதன் வழியாக நோன்பாளிகள் நுழைவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். நோன்பாளிகள் எங்கே?’ என்று கேட்கப்படும். உடனே அவர்கள் எழுவார்கள். அவர்களைத் தவிர வேறு எவரும் அதன் வழியாக நுழைய மாட்டார்கள். அவர்கள் நுழைந்ததும் அவ்வாசல்கள் அடைக்கப்பட்டுவிடும். அதன் வழியாக வேறு எவரும் நுழைய மாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் (ரலி), நூல்: புகாரீ (1896), முஸ்லிம் (2121)

அல்லாஹ்விற்கு மிக விருப்பமான வணக்கம்

“நோன்பு நரகத்திலிருந்து காக்கும் கேடயமாகும். நோன்பாளியின் வாய் நாற்றம் அல்லாஹ்விடம் கஸ்துரியை விடச் சிறந்ததாகும்” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1894)

“நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு துறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நுல்: புகாரீ (1904)

இறைவனைச் சந்திக்கும் போது நோன்பாளிகள் மகிழ்ச்சியடைவார்கள் என்றால் அவர்கள் மகிழ்வுறும் விதத்தில் அவர்களை இறைவன் நடத்துவான் என்பது பொருளாகும்.

ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது

இம்மாதத்தில் உள்ள லைத்துல் கத்ர் எனும் இரவில் செய்யப்படும் வணக்கம் ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்தை விடச் சிறந்ததாகும். உதாரணத்திற்கு ஒருவர் ஆயிரம் மாதம் இரண்டு ரக்அத்கள் தொழுது வந்தால் கிடைக்கும் நன்மையை விட இந்த ஒரு இரவில் இரண்டு ரக்அத்கள் தொழுவதற்குக் கூடுதலான நன்மைகள் கிடைக்கும்.

மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறை வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

எனவே இவ்வருட ரமலான் மாதத்தை, நாம் சொர்க்கம் செல்வதற்குரிய வழியாக மாற்றி, நிறைந்த நற்செயல்களை செய்ய வல்ல அல்லாஹ் நமக்கு அருள்புரிவானாக!

Thursday, July 8, 2010

முஸ்லிம் பெண்களின் மாற்று மதத்தவர்களுடன் ஓட்டம் அதிகரிப்பு

--- On Thu, 7/8/10, Mohamed Amanullah wrote:


From: Mohamed Amanullah
Subject: Fwd: FW: முஸ்லிம் பெண்களின் காதல் - சமுதாயத்தின் மானக்கேடு - காரணங்களும் எச்சரிக்கையும்.
To: "Makbool Ahmed" , "Seyed N. Azher" , "a.jakkariya" , "kamal basha" , "faizur_lal" , "faiz3989" , "harris_mohamed" , "Muhammad hamid" , "hafizriza" , "haneefjamali" , "inam581" , "jubbaiam" , "jkjafer.ali" , "mdazar66" , "mdnasar40" , "mohamed rila" , "mr.jat007" , "mahathir24" , "nizamdeen47" , "nmsiddiq" , "nasrathbanu" , "Salman Paris" , "rais.lpt" , "riyas_best2008" , "riyaz_lal"
Date: Thursday, July 8, 2010, 9:09 AM

Subject: Fwd: FW: முஸ்லிம் பெண்களின் காதல் - சமுதாயத்தின் மானக்கேடு -
காரணங்களும் எச்சரிக்கையும்.
To:



* ***



*NENJJAM PORRUKKAVILLAIYEE INTHA KEDU KETTA JENMANGHALAI NEINAITHU*



*Dear Brothers Need Dawaa in Our District. Please do the Dawaa. This is Very
important. Tommorrow Allaah will ask to us.*

* *

* *

*Latest News*

**



*பாதுகாப்பு கோரி காதல் ஜோடி பர்வானா &** சுப்ரமணியன் எஸ்.பி.,** யிடம் மனு.*

கடலூர்:(( JULY – 2010) சிதம்பரம் அண்ணாகுளம் கீழக்கரையைச் சேர்ந்தவர்
*இன்ஜினியர்
சுப்ரமணியன்(**25). **சிதம்பரம் மாரியம்மன் கோவில் தெரு கவுஸ்மொய்தீன் மகள்
பர்வானா(19).* இருவரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இது பர்வானா
பெற்றோருக்கு தெரிய வந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இருவரும்
வீட்டைவிட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.பின்னர்
சுப்ரமணியன், பர்வானா
இருவரும் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கோரி பாதுகாப்பு கேட்டு மனு
கொடுத்தனர். இதனையடுத்து மனு மீது நடவடிக்கை எடுக்க எஸ்.பி., சிதம்பரம்
போலீசாருக்கு உத்தரவிட்டார்.

முஸ்லிம் பெண், ஹிந்து காதலனுடன் தலைமறைவு.

மதுரை; (ஜூன்.2010) கடந்த மாதம் திருச்செந்தூருக்கு அருகில் உள்ள முஸ்லிம்கள்
அதிகம் வசிக்கும் ஊரில் ஒரு தீன்குலப்பெண் மதுரையில் ஹாஸ்டலில் தங்கி
M.PHIL படித்து
வந்தவர். ஹிந்து காதலனுடன். வீட்டுக்கு தெறியாமல் தலைமறைவு. மாற்றுமத ஹாஸ்டல்
தோழிகள்தான் காதலுக்கு உதவி புரிந்து, வீட்டை விட்டு வெளியேற திட்டம் வகுத்து.
ஜோடிகளை சேர்த்து வைத்துள்ளார்கள். செய்தி அறிந்த பெண்ணின் தாயார்
அதிர்ச்சியில் கோமா நிலையில். இருக்கிறார்.

[image: http://epaper.dinakaran.com/pdf/2010/02/05/20100205a_010108005.jpg][image:
http://tm.dinakaran.com/pdf/2010/02/02/20100202a_005109005.jpg][image:
http://epaper.dinakaran.com/pdf/2010/02/05/20100205a_010108006.jpg]

*கடந்த சில மாதங்களாக இப்படியான செய்திகள் தொடர்ந்து வருகிறது. *

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே!! எச்சரிக்கை – கவனம் – உஷார்.

மார்க்கம் அறியாத பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளுக்கும் மார்க்கத்தை
கற்றுக்கொடுக்காமல். வீட்டிலும் மார்க்கத்தை பேணாமல். தங்களின் பொறுப்பை
மறந்து..,.

தங்களது பிள்ளைகளுக்கு ””செல்லம்” ”பாசம்” ஃபேஷன்” என்ற பெயரில் சுதந்திரம்
கொடுத்து. பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வதாக கருதி அவர்கள் வழிகெட
காரணமாகிறார்கள்.



ஏற்கனவே ஈமான் என்றால்? என்ன இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் எப்படி
வாழ வேண்டும். என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல். ஹிஜாப் முறையை சரிவர
பேணாமல்,, அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும்
நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க வேண்டி *வீட்டை விட்டு வெளியேறி**,
* *பள்ளிக்கூடம். காலேஜ்,** ட்யூசன், ** **கம்ப்யூட்டர் கிளாஸ், **
**ட்ரைனிங்கிளாஸ்
, **ஹாஸ்டல், ** **இண்டெர்நெட் கஃபே, **ஸ்கூல்-டூர்,** காலேஜ்-டூர், *என்று
போகும் இடங்களில், மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும்,
நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது
கலாச்சாரத்தையும். பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். இதன் காரணமாக சில மாற்று மத
இளைஞர்கள் நமது முஸ்லிம் தீன் குலப்பெண்களுக்கு அண்ணன்களாகவும். நண்பர்களாகவும்,
ஆகிவிடுகிறார்கள்.



இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மாற்றுமத இளைஞர்கள்.
காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.



இன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி
மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக “சினிமா’ முதல் காரணமாக
இருக்கிறது.



“சினிமா’ என்றவுடன் தியேட்டர்தான் ஞாபகம் வரும். ஆனால் இன்று ஒவ்வொரு முஸ்லிம்
வீடும் தியேட்டராகவே இருக்கிறது.



அதுதான் ( T.V ) தொலைக்காட்சி. (எல்.சி.டி – 20 இன்ச் முதல் 60 இன்ச் வரை
திரைகள் வசதிக்கு ஏற்றவாறு)

கேபில் கனெக்சன் போதாது என்று டிஷ்கள். மற்றும் DVD பிளேயர்கள் with USB-PORT.



வீடியோ-மொபைல்கள்@இண்டெர்னெட்,. >>> DESK-TOP கம்ப்யூட்டர்@இண்டெர்நெட். வசதி
இருப்பின் >>>

லேப்டாப் கம்ப்யூட்டர் @USB இண்டெர்நெட்மோடம். என்று இந்த
“சினிமா’”அனாச்சாரங்களும் ஆபாசங்களும் நமது வீட்டிலிருந்து –
பாக்கெட்டு வரை கிடைக்க >> பெண்களின் பெற்றோர்களும், பெண்ணின் கணவனும்.
உழைக்கிறார்கள்.



கேட்டதை வாங்கி கொடுப்பவர்களே!!



· மேற்கண்ட சாதனங்களை பிள்ளைகள் எப்படி பயன்படுத்துகிறார்கள்.

· யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள். எத்தனை சிம் கார்டுகள்
உபயோகிக்கிறார்கள்.

· மாற்று மத தோழிகள் வீட்டுக்கு சென்று என்ன செய்கிறார்கள். அவர்களது
வீட்டில் ஆண்களோடு பழகுகிறார்களா?

· தனி அறையில் இருந்து T.V யில் எந்தெந்த சேனல்கள் பார்க்கிறார்கள்.
என்ன சி.டி.பார்க்கிறார்கள்.

· கம்ப்யூட்டரில் (இண்டெர்நெட்டில்) தனிமையில் இருந்து என்ன
பார்க்கிறார்கள் என்ன செய்கிறார்கள்.

· இ-மெயிலில், சாடிங்கில் யார் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள்...



என்பதை கேட்டு தெறிந்து கொள்கிறீர்களா? அல்லது எச்சரிக்கை உணர்வோடு
கண்காணிக்கிறீர்களா?



என்னோட பிள்ளையை நானே கண்காணிப்பதா? சந்தேகப்படுவதாக ஆகாதா? என்று கருதாமல்.
என்னுடைய பிள்ளையின் வாழ்க்கை, குடும்ப மானம், இஸ்லாத்தின் கண்ணியம். இவற்றை
முன்னிறுத்தி. கவனமாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.. இது விசயத்தில்
சிந்தித்து செயல் பட வேண்டியது. ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் பெற்றோருக்கும்.
ஒவ்வொரு தீன்குலப்பெண்ணின் கணவனுக்கும். மிக மிக அவசியம். என்பதை மேற்காணும்
செய்திகள் நமக்கு உணர்த்துகின்றன.



முஸ்லிம் பெண்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும். கற்பை சூரையாட வேண்டும், என்று
திட்டமிட்டு செயல்படும் *நாசகார கும்பல்கள்*. ஹிந்து மாணவர்களுக்கும்
மாணவிகளுக்கும் பயிற்சி கொடுத்து வருகின்றன.

முஸ்லிம் பெண்களை கவர்வது எப்படி, நல்லவர்களாக அன்பை பொழிபவர்களாக நடித்து
வலையில் சிக்கவைப்பது எப்படி, மயக்க மருந்துகள் கொடுத்து வீடியோ பிடித்து
மிரட்டி பணிய வைப்பது. இந்த காரியங்களுக்கு தோழிகளாக இருந்து எப்படி செயல்பட
வேண்டும் என்று பயிற்சிகளும் கொடுக்கிறார்கள்.

ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் முடித்தாலோ. அல்லது திருமணமான பெண்ணை தன் வலையில்
சிக்க வைத்தாலோ – அவர்களுக்கு ஒரு லட்ச ரூபாயும் அன்பளிப்பும். வழங்கப்படுகிறது.




இந்த செய்தியை (எச்சரிக்கையை) பலமுறை இந்த குழுமத்தில் பார்த்து இருக்கிறோம்.



நம் சமுதாய பெண்களின் பெற்றோர்களிடமும், கணவன்மார்களிடமும், விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்.



ஈமானுக்கு சோதனையான காலம் இது.



விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், வந்துவிட்டது,
முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின்
மூலமும் நேரடியாகவும் அழைப்பு விடுகிறார்கள்.

நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள். இனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல்
இருக்க

மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள். முஸ்லிம்
பெண்களிடத்தில் தொழுகையை நிலைநிருத்தும்படி ஏவுங்கள்.



முஸ்லிம் சகோதரர்களே!! மணப்பெண் தொழுகையாளிதான் என்பதை உறுதி செய்த பின்
மணமுடியுங்கள்.



*”**தொழுகை மானக்கேடான காரியத்தை விட்டும் பாதுகாக்கும்.**” **இது அல்லாஹ்வின்
வாக்கு.*



பெற்றோர்களே!! உங்கள் பிள்ளைகளை நரகத்தின் தீயிற்கு இறையாக வளர்க்காதீர்கள்.
உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும் நிலைக்கு ஆகிவிடாதீர்கள்.
பெண்கள் உங்கள் அமானிதம் பேணி வளருங்கள்.



இவ்வுலகில் - நாகரிகத்தையும், கவுரவத்தையும், அந்தஸ்தையும் விட. மானம்,
மரியாதையும். ஈமானும் இறையச்சமும்தான் முக்கியம்.



அல்லாஹ். அர்ரஹ்மான் நம் அனைவரையும். மானக்கேடான விஷயத்தில் இருந்து
பாதுகாத்து, ஈமானோடு வாழவைத்து முஸ்லிமாக மரணிக்க செய்வானாக! ஆமீன்.



சிந்திப்போம் செயல்படுவோம்.










*நபிமொழி : **09**4 - **NABIMOZI – 094*

* *

*இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:*

* '**நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர். ஒவ்வொருவரும் தன் பொறுப்பு
பற்றி விசாரிக்கப்படுவார். தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி
விசாரிக்கப்படுவார். ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின்
பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு
பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள். ஓர்
ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார். ஒவ்வொருவரும்
பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்! என்று
நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,**முஸ்லிம்)** **(ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)* **

* *

*நவாஸ் இப்னு ஸம்ஆன்(ரலி) அறிவிக்கின்றார்கள்:*

*'**நன்மை பற்றியும், **தீமை பற்றியும் நபி (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். ''
**நல்லது என்பது, **நற்குணம்தான். தீமை என்பது உன் உள்ளத்தை
உறுத்துவதும், **மக்கள்
அதைப் பார்த்து விடுவதை நீ வெறுப்பதும் ஆகும்'' **என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(முஸ்லிம்) ** ** **(ரியாளுஸ்ஸாலிஹீன்: 624)*

Wednesday, June 2, 2010

பொறியியல் படிப்பு இலவசம்:

முஸ்லிம் மாணவ, மாணவியர் பயன்படுத்திக் கொள்வார்களா?


பெரும்பாலான மாணவ, மாணவியர் +2 முடித்தவுடன் பி.இ. எனப்படும் என்ஜினியரிங் படிப்பு படிக்கவே விரும்புகின்றனர். தமிழ்நாட்டில் மொத்தம் 454 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்து படிக்க முடியும்.

ஆனால் சென்ற ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்தனர். மீதமுள்ள 30 ஆயிரம் சீட்டுகள் கடைசி வரை காலியாகவே கிடந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு மேலும் 94 பொறியியல் கல்லூரிகள் புதிதாக துவங்கப் பட உள்ளன. இதற்கு அனுமதி கோரி அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலுக்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன, இவற்றில் பெரும்பாலான கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் என்று தெரிகிறது.

இதன் மூலம் கூடுதலாக 12 ஆயிரம் மாணவ, மாணவியர் பொறியியல் படிப்பு படிக்கலாம். சுருங்கச் சொல்வதெனில் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் சீட் ரெடி. இது தெரியாமல் நிறைய முஸ்லிம் மாணவ, மாணவியர் நிர்வாகக் கோட்டவுக்கு பல லட்ச ரூபாய் கொடுத்து விட்டு கை பிசைந்து நிற்பதை பார்க்க முடிகிறது.

பொறியியல் படிப்புக்கு மூன்று விதத்தில் சீட்கள் ஒதுக்கப்படுகின்றன. +2வில் மிக அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவியருக்கு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும். இந்த சீட்களை பெற்றவர்களுக்கு வருடத்திற்கு 12 ஆயிரம் ரூபாய்க்கு மேல் கட்டணம் வராது.

அதோடு நன்கொடையும் பெறப்படாது. அதற்கு அடுத்த மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அரசு உதவி பெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் சீட்கள் ஒதுக்கப்படும்.

ஒரு தனியார் கல்லூரிகளில் 100 சீடகள் இருந்தால் அதில் 60 சீட்கள் அரசு வசம் ஒப்படைக்கப்படும். அதே தனியார் கல்லூரி சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரியாக இருந்தால் 40 சீட்கள் அரசு வசம் ஒப்படைத்து விடுவார்கள்.

இப்படி அரசு வசம் ஒப்படைக்கப்பட்ட கல்லூரி சீட்களுக்கு கவுன்சிலிங் மூலம் மாணவ, மாணவியர் தேர்ந்தெடுக்கப்படுவர். இந்த சீட்களுக்கு கட்டணமாக ரூ. 32 ஆயிரம் வரை (வருடத்திற்கு) செலுத்த வேண்டியிருக்கும். இந்த சீட்களும் கிடைக்காமல் போகும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாக கோட்டா சீட் தான் கதி.

ஒரு தனியார் கல்லூரி 100 சீட்களில் 60 சீட்களை அரசு வசம் ஒப்படைத்து விட்டால் மீதம் 40 சீட்கள் இருக்குமல்லவா? இந்த 40 சீட்கள் தான் நிர்வாக கோட்டா சீட்கள் என அழைக்கப்படுகின்றன. தரமான கல்லூரிகளில் இந்த சீட் 3 லட்ச ரூபாய் வரை விலை போகிறது.

பிரபலமல்லாத கல்லூரிகளில் வெறும் 32 ஆயிரம் ரூபாய்க்கும் தரப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இட ஒதுக்கீடு உள்ளது. இந்த இட ஒதுக்கீடு கிடைத்த பிறகு எப்போதும் இல்லாத வகையில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் அதிக முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு இடம் கிடைத்துள்ளது.

இதில் இடம் கிடைக்காத முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு தனியார் கல்லூரிகள் அரசு வசம் ஒப்படைத்த சீட்களில் படிக்க இடம் கிடைக்கும். இதிலும் 3.5 சதவீத இட ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு உண்டு. அதனால் பொறியியல் படிப்பு படிக்க விரும்பும் முஸ்லிம் மாணவ, மாணவியர் அதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து இந்த மாதம் 31ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி விட வேண்டும்.

அடுத்த ஜீன் மாதம் 18ம் தேதியன்று ரேங்க் பட்டியல் வெளியிடப்படும். அதன் பிறகு 28ம் தேதியன்று கவுன்சிலிங் தொடங்கும். அந்தக் கவுன்சிலிங் ஜீலை 25ம் தேதி முடிவடையும்.

இந்த ஆண்டு மருத்தவம், பல் மருத்துவம், பொறியியக்ம் வேளாண்மை, கால்நடை மற்றும் சட்டக் கல்லூரிகளில் சேரும் மாணவ, மாணவியர் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரியாக இருந்தால் படிப்பு கட்டணச் செலவை அரசே ஏற்கும். விண்ணப்பதாரரின் தாய், தந்தை, பெற்றோரின் பெற்றோர், உடன் பிறந்தோர் பட்டதாரியாக இல்லாமல் இருந்தால் இந்தச் சலுகை கிடைக்கும்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையும், தனியார் கல்லூரிகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயிக்கும் கட்டணத்தையும், பல்கலைக் கழக பாடப் பிரிவுகளுக்கு பலகலைக் கழகம் நிர்ணயிக்கும் கட்டணத்தையும் அரசு செலுத்தி விடும்.

இந்த சலுகையை பெற வேண்டுமெனில் தங்கள் குடும்பத்தில் வேறு பட்டதாரி எவரும் இல்லை என்ற சான்றிதழை தங்களது பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் மூலம் விண்ணப்பித்து துணை வட்டாட்சியர் பதவிக்கு குறையாத அலுவலரிடம் இருந்து சான்றிதழ் பெற்று இணைக்க வேண்டும்.

பெரும்பாலான முஸ்லிம் குடும்பங்களில் பட்டதாரிகள் இருக்க மாட்டார்கள். அதனால் இந்த கட்டணச் சலுகை முஸ்லிம் மாணவ, மாணவியருக்கு பலன் தரும் என்பதே உண்மை. இந்தச் சலுகையை முஸ்லிம் மாணவ, மாணவியர் ஒழுங்கான முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Thursday, May 27, 2010

டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...


நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்

டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்


பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.



அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.



படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.



இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.



நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.



மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.



ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.



அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.



மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.



இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.



மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-



மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.



பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.



10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.



இவ்வாறு அவர் கூறினார்.



மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-



எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.



கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.



இவ்வாறு அவர் கூறினார்.



மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-



நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.



நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.



தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்

Tuesday, May 25, 2010

கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்

அன்புச்சகோதரர்களுக்கு :

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

(இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

கோடை காலம் தொடங்கி விட்டதால், திருட்டை தடுக்க பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து, போலீசார் 20 யோசனைகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர்.



பொதுமக்களுக்கு போலீசார் விநியோகிக்கும் துண்டு பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ள விவரம் வருமாறு:


1. வீடுகளில் இரவு நேரங்களில் முன் மற்றும் பின் பகுதியில் பல்புகளை எரிய விடவும். வீட்டின் அனைத்து கதவு, ஜன்னல்கள், தாழ்ப்பாள்கள், பூட்டுகள் உறுதியானவையாக இருக்க வேண்டும்.


2. வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கும்போது வந்திருப்பவரை ஜன்னல் வழியாகவோ, கதவில் பொருத்திய லென்ஸ் வழியாகவோ பார்த்து, அடையாளம் தெரிந்த பிறகு கதவை திறக்க வேண்டும்.


3. வாசல் மற்றும் முன், பின் கதவுகளுக்கு கூடுதலான தாழ்ப்பாள்கள், கதவுகளுடன் உள்ள சங்கிலி இணைப்புகள் வீட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும்.


4. குளியலறை மற்றும் ஏர்கண்டிஷன் ஜன்னல்களுக்கு கூடுதல் கிரில் கம்பி பாதுகாப்பு கொடுங்கள்.


5. உங்கள் மொட்டை மாடியில் இருந்து மாடிப்படி வழியாக வீட்டுக்குள் வர இயலாத வகையில் தடுப்புச் சுவர் மற்றும் கதவுகளை அமைத்து, அடைத்து வைக்கவும்.


6. வீட்டைப் பூட்டி விட்டு செல்பவர்கள், அருகில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லவும்.


7. வெளியே செல்லும்போது எல்லா அறைகளையும் பூட்டி சாவிகளை உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

8. பகல் நேரங்களில் தண்ணீர் கேட்டோ, விசாரணை என்ற பெயரிலோ, விற்பனையாளர்களாகவும், மின்சாரம், தொலைபேசி ரிப்பேர் செய்பவர்களாகவும், பால் கவர், பழைய பேப்பர் வாங்குபவர்களாகவும், நகைக்கு பாலீஸ் போடுபவர்களாகவும், திருடர்கள் வரலாம். இரக்கம் காட்டி ஏமாற வேண்டாம்.


9. சந்தேகத்துக்கிடமாக யாரேனும் உங்கள் வீட்டையோ, தெருவிலோ, சுற்றித் திரிந்தால், நோட்டமிட்டால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுங்கள். அவர்களை விசாரிக்கையில் ஒத்துழைப்பு கொடுங்கள். டிவி பார்க்கும்போதும், சமைக்கும்போதும் வீட்டின் கதவு உள்பக்கம் எப்போதும் பூட்டியபடியே இருக்கட்டும்.


10. வீட்டில் தனியாக இருப்பவர்கள் அறிமுகம் இல்லாத நபர்களை டி.வி., போன், கிரைண்டர், பிரிட்ஜ் ரிப்பேர் செய்ய அனுமதிக்கக் கூடாது. அத்தகையோர் வேலை செய்யும்போது உங்களையும், உங்கள் பொருட்களையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளவும். அவர்களை வைத்துக் கொண்டு பணம் நகைகளை எடுக்கவோ, கழற்றி வைக்கவோ கூடாது.


11. வீட்டின் வேலைக்காரர்களை நியமிக்கும்போது அவர்களது இருப்பிட முகவரி மற்றும் புகைப்படம் அவருக்கு தெரிந்த நபர்களின் விலாசம் ஆகியவற்றை சேகரித்துக் கொள்வது அவசியம். வீட்டு வேலைக்காரர்களிடம் வீட்டைப் பார்த்துக் கொள்ளச் சொல்வதை தவிர்க்கவும். உங்கள் பணம் மற்றும் நகைகளை பாதுகாக்க வங்கி லாக்கர் மிகச் சிறந்தது.


12. அந்நியர்களுக்கு வீட்டை வாடகைக்கு விடும்போது, அவர்களுடைய உறவினர்களின் விவரங்கள், அலுவல், தொழில் விவரங்கள், லைசென்ஸ், பாஸ்போர்ட், காஸ், வங்கி கணக்கு விவரம் போன்றவற்றின் நகல் பெற்ற பின்பு அனுமதிக்கவும்.


13. உங்கள் தெரு, காலனி, அப்பார்ட்மென்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்புக்கு தனியார் பாதுகாவலர்களை நியமிக்கவும்.


14. பஸ்சில் பயணம் செய்யும்போது உங்கள் பர்ஸ், செல்போன் மற்றும் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ளவும்.


15. உங்கள் பணம் கீழே கிடப்பதாகக் கூறி கவனத்தை திசை திருப்பி உங்கள் உடமைகளை அபகரிக்கலாம்.


16. மக்கள் நடமாட்டம் இல்லாத தெருக்களில் பெண்கள் தனியே செல்லும்போது செயின் பறிப்பு திருடர்களிடம் கவனமாக இருக்கவும்.


17. பொது இடங்களில் வைத்து உங்கள் பணத்தை எண்ணுவதை தவிர்க்கவும்.


18. வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றாலோ, கணவன்& மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு செல்பவராக இருந்தாலோ, காவல் நிலையத்துக்கு தகவல் தந்தால், நாங்கள் உங்கள் வீட்டை கண்காணிக்க வசதியாக இருக்கும். தொலைபேசியில் தகவல் சொன்னால் போதும்.


19. இரவு நேரங்களில் தூங்கும்போது கதவு மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்து விட்டு தூங்குவது, ஜன்னல் அருகே விலை உயர்ந்த பொருட்களை வைப்பதை தவிர்க்கவும்.


20. இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்கும்போது சைடுலாக் அவசியம் போட வேண்டும்.
இவ்வாறு அந்த துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ளது.

Sunday, May 23, 2010

இந்த அநீதிக்கு யார் பொறுப்பு?

1997 ஆம் ஆண்டு ரயில்களில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் குணங்குடி ஹனீபா உள்ளிட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முஸ்லிம்கள் மீது குற்றம் நீருபிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் கடந்த 21-5-2010 அன்று அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அனைத்து துறைகளிலும் முஸ்லிம்கள் இரண்டாம் தாரக் குடிமக்களாக நடத்தப்படுவது போல் நீதித்துறையிலும் முஸ்லிம்களின் உரிமைகள் மீதிக்கப்படுகின்றன என்பதற்கு இந்த வழக்கு மற்றுமொரு உதாரணமாக அமைந்துள்ளது.

கடுமையான குற்றச்சாட்டால் கைது செய்யப்படுவோர் முஸ்லிமாக இல்லாவிட்டால் சில மாதங்களிலேயே அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுவிடுகின்றனர்.

காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட எத்தனையோ குற்றவாலிகள் சில மாதங்களில் ஜாமினில் வெளியே வந்துள்ளதை நாம் காண்கிறோம். ஆனால் சமுதயாத்தின் முக்கிய பிரமுகராக இருந்து கைது செய்யப்பட்ட குணங்குடி ஹனீபாவுக்கு ஜாமின் வழங்கிட தொடர்ந்து நீதிமன்றம் மறுத்து வந்தது.

12 ஆண்டுகளாக குணங்குடி ஹனீபா சட்ட ரீதியாக நடத்திய அனைத்துப் போராட்டங்களும் பயனற்றுப் போயின.

குற்றமற்றவர் என்று இப்பொழுது தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம் அவருடைய 12 ஆண்டு காலத்தை திருப்பிக் கொடுக்குமா?

பொய் வழக்கில் கைது செய்த கருணாநிதியும் அவரது அதிகாரிகளும் திருப்பிக் கொடுப்பார்களா?

12 ஆண்டு சிறை வாசத்தில் தனது இளமையையும் ஆராக்கியத்தையும் இழந்து தனிமனித சுதநத்திரத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டது போல் இவர்களுக்கு ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்வார்களா?

குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பில் இருந்த ஹனீபா கைது செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தினர் பட்ட துயரம் போல் கருணாநிதியின் குடும்பத்துக்கும் நீதிபதிகளின் குடும்பத்திற்கு ஏற்பட்டால் இவர்களுக்கு எப்படி இருக்கும் என்று இவர்கள் நினைத்து பார்க்க வேண்டாமா?

குணங்குடி ஹனீஃபாவை ஜாமினில் விடக் கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பல வருடங்களாக குரல் எழுப்பி வந்தன.

தமழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்த தேர்தல் முடிந்த பின் துனை முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து குணங்குடி ஹனீபாவை ஜாமினில் விடுங்கள் என வழியுறுத்தியது.

ஜாமின் மனு போடச் சொல்லுங்கள் அரசு தரப்பில் ஆட்சேபினை தெரிவிக்க மாட்டோம் என ஸ்டாலின் உறுதியளித்தார். இதை நம்பி குணங்குடி ஹனீபா ஜாமின் மனு தாக்கல் செய்த போது அரசு தரப்பில் கடுமையான ஆட்சேபனை தெரிவித்ததால் கடைசி ஜாமின் மனுவும் நிராகரிக்கப்பட்டது.

திமுக வின் இந்த பச்சைத் துரோகம் காரணமாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திமுக வுடன் இருந்த நல்லுறவை அன்றோடு துண்டித்துக் கொண்டது.

இது குறித்து கடுமையான தலையங்கம் உணர்வில் எழுதப்பட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்க்ள.

அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்து வகையிலான முட்டுகட்டைகளை போட்ட போதும் பொய் வழக்கு என்பதால் குணங்கு ஹனிஃபா விடுதலை செய்யப்பட்டுவிட்டார்.

ஒரு வேளை அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கூட அவர் சிறையில் கழித்த 12 ஆண்டுகளை விட குறைவாகவே தான் தண்டனை வழங்கப்பட்டிக்கும் என்பதை நினைக்கும் போது குணங்குடி ஹனிபாவிற்கு எத்தகைய அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

குணங்கு ஹனீபா அவர்கள் விடுதலை செய்பட்டு வரும் போது அனைத்து இயக்கத்தினரும் வரவேற்க வந்த போது தவ்ஹீத் ஜமாஅத் ஏன் வரவில்லை என்று சிலருக்கு தோன்றலாம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஐ பொருத்தவரை வரவேற்பு கலாச்சாரத்தை ஏற்றக் கொள்வதில்லை.

ஜவாஹிருல்லாஹ் வெளிநாட்டில் இருந்து வந்த போது வரவேற்பு சுவரொட்டி ஒட்டியதும் பிரிவினைக்கு ஒரு காரணமாக அமைந்தது அனைவருக்கும் தெரியும்

பி.ஜே அவர்கள் மலேசியாவில் கைது செய்யப்பட்ட போது மலேசிய தூதரகத்தை முற்றுகையிட மக்கள் அழைக்கப்பட்டு மலேசிய தூதரகத்தை முற்றுகையிட்டனா.

முற்றுகையிட வந்த மக்கள் பி.ஜே விடுதலை செய்யப்பட்டதை கேள்வி பட்டு உடனே விமானம் நிலையம் வந்தனர்.

அப்போது பி.ஜே யும் ஐந்து மாநில நிர்வாகிகளும் வெளிநாட்டில் இருந்ததால் இதை தடுக்க முடியவில்லை

இது பற்றி கடுமையான விமர்சனங்கள் எழுந்த போது இனி எதிர்காலத்தில் இது போன்ற வரவேற்பு நிகழச்சிகள் நடக்காமல் கவணமாக இருப்போம் என்று நிர்வாகத்தின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டதை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்

வரவேற்பு அளிக்கும் கலாச்சாரத்தை தவ்ஹீத் ஜமாஅத் ஆரம்பம் முதலே எதிர்த்து வருவதால் குணங்குடி ஹனீபாவையும் வர வேற்கச் செல்ல வில்லை என்பதை கூறிக் கொள்கிறோம்.

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா? உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால் ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்

தாய்- ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?

மகன்- சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!

தந்தை- ஏன்டா! மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே! தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே? இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்! ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?

மகன்- என்னப்பா? உனக்கு அறிவு இருக்கா! சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் காட்டுறியே? நீ எல்லாம் ஒரு அப்பனா? இது உனக்கு நல்லா இருக்கா? வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா! இப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிடு இதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாத! மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள்! என்ன தொல்லை பண்ணாத!

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்! நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!

மனைவி- என்னங்க! நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது! அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்கு! இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லுங்கள்? ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?

கணவன்- என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரே! பொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேற? கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா? இந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!

எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா..........................................????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!
அல்லாஹ் ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனே! என் அடிமையே! நான் உனக்கு
• நல்ல பெற்றோரை கொடுத்தேன்!

• நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்!

• அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்!

• சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்!

• கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்!

• உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்!

• நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும் அணுப்பினேன்

முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?
படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?
நீங்கள் ?

அன்புச் சகோதர, சகோதரிகளே வாழந்து விட்டால் போதுமா? நாலு காசு சம்பாதித்தால் போதுமா? சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?

இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையா? சகோதர சகோதரிகளே

நம்முடைய அராஜக குணத்தால்
• பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
• வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
• கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
• ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்

மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?

வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா? நட்டமா?

இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)

'அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்''
(திருக்குர்ஆன், 5:72)

நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், 'பொய் கூறுவதும்' அல்லது 'பொய்ச் சாட்சியம் சொல்வதும்' பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும். இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் 'பெரும் பாவங்கள்' என்று வந்துள்ளது.
(புகாரி 6871)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன். என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6882)


அன்புச் சகோதர சகோதரிகளே!
மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை! இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!

சிந்திப்பீர்! செயல்படுவீர்!

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

குறிப்பு
இந்த கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வுகளை உணர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். (தவறாக தென்பட்டால் மன்னிக்கவும்)



--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355